ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் பெயர்குறிப்பீடு செய்யப்படும் வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர்கள் வைப்புப் பணம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, வேட்பாளர்கள் வைப்புப் பணத்தைச் செலுத்தும்போது, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் கையொப்பத்தின் கீழான சான்றிழொன்றின் மூலம் உறுதிப்படுத்துதல் ஒரு கட்டாயத் தேவைப்பாடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கான கட்டுப்பணம்
இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இது வரையில் நான்கு போட்டியாளர்கள் தமது வேட்புமனுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன சிசல லக்மால் அனில் ஹேரத், எஸ்.பி. திரு. லியனகே ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
