முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 33 ஆவது நினைவு தினம் முன்னெடுப்பு
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு நேற்று காலை(01.05.2026) நடைபெற்றது.
நினைவேந்தல்
கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் திருவுருவச் சிலை வளாகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
மேலும், அங்கு அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது தாயார் ஹேமா பிரேமதாஸ உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேற்று மாலை கங்காராம விகாரையில் இடம்பெற்ற தர்ம போதனை நிகழ்வைத் தொடர்ந்து, இன்று காலை அன்னாரது சிலையடியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.





புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri