பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு
பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகும் முடிவினை எடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சம்பந்தமாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ள நிலையில், அதனை பாஜக தலைமை வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்
அண்ணாமலையின் முடிவு
ஆனாலும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சமீப காலமாகவே கட்சியில் இருந்து ஒரம்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அத்தோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு ஆசனம் வழங்கப்படாததும், அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேர்தல் முடிவுக்கு பின்பாக அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் நேற்றைய தினம் டெல்லிக்கு சென்ற அண்ணாமலை தனது பதவி விலகல் கடிதத்தை பாஜகவிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நிதின் நபின், அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதே நேரம் அவரிடம் பதவி விலகல் கடிதத்தை பாஜக தலைமை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாஜகவிலிருந்து விலகல்
பாஜகவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் இது சம்பந்தமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் தன்னுடைய முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்த காரணத்தால், இந்த பேச்சுவார்த்தை என்பது தோல்வியை தழுவியுள்ளது. பாஜகவில் தொடர்ந்து பயணிக்க முடியாது.

விலக போகிறேன் என்று உறுதியாக தன்னுடைய பதிலை கூறியுள்ளார் அண்ணாமலை. அதோடு பாஜகவில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்தும் விரிவாக அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் மீண்டும் மாநில தலைவர் பொறுப்பு கொடுத்தாலும், தமிழக பாஜகவில் உள்ள பிற தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே என்னை தனியாக செயல்பட விடுங்கள் என தன்னுடைய முடிவை அண்ணாமலை உறுதியாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நாளை தனது பிறந்த நாளில் பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் அண்ணாமலை வழங்கியுள்ள பதவி விலகல் கடிதத்தில் தமிழ்நாடு பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணங்களையும் விரிவாக தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக பாஜகவினர் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தனிக்கட்சி ஆரம்பம்
அத்தோடு பாஜக தலைமையிடம் தான் கட்சியில் இணைந்த சமயத்தில் தன்னை நம்பி பல இளம் வயதுள்ளவர்கள் எனக்கு பின்னால் அணி வகுத்தனர்.
அவர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை முன்வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், பாஜகவுடன் இணக்கமாகவே செயல்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
இதனால் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனிடையில் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதை பட்டாசு வெடித்து அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர்.
அத்தோடு அண்ணாமலைக்கு ஆதரவாக பல இடங்களிலில் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தலைமை ஏற்க வா, தமிழ்நாடு பொலிடிகல் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan