இதோ இனி புண்ணாக்கு சாப்பிடுங்கள்! புண்ணாக்கு சாப்பிட்டு கோட்டாபய மீது கோபத்தை வெளிப்படுத்திய இளைஞர்
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பல பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், “இதோ, இனி புண்ணாக்கு சாப்பிடுங்கள்” என இளைஞரொருவர் கடும் தொனியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பாண் சாப்பிட வழியில்லை, ஒரு இராத்தல் பாண் 100 ருபாய்! பரோட்டா வாங்கலாம் என்று பார்த்தால் ஹோட்டலில் பரோட்டா போட எரிவாயு இல்லையாம்.
புண்ணாக்கை சாப்பிட சொல்கின்றார்கள்! அதன் பின்னர் நான் புண்ணாக்கு 250 g வாங்கி வந்தேன்! இனி இதை சாப்பிடுகிறேன்! வேறு என்ன தான் செய்ய! து..து... சாப்பிடவும் முடியவில்லை! ஆனால் எப்படியும் சாப்பிட்டு தானே ஆக வேண்டும்!
இப்படியாவது நாம் வாழவேண்டும்! தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தான் சாப்பிடவேண்டும்! சொல்லிவேலையில்லை நந்தசேன நீ செய்த வேலை! உங்களுக்கும் புண்ணாக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள்! ஒரு கிலோகிராம் 70 ரூபாய்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
