நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது: அங்கஜன் இராமநாதன்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Angajan Ramanathan Court of Appeal of Sri Lanka
By Kajinthan Sep 29, 2023 05:50 AM GMT
Report

தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (29.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ளதாவது, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகள் மற்றும் கள விஜயங்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நீதிபதிக்கு விடுக்கப்பட்டு வந்துள்ளது இதனூடாக வெளிப்பட்டுள்ளது. சுயாதீனமாக செயற்பட வேண்டிய நீதிக்கட்டமைப்பை ஆட்டங்காணச் செய்த குறித்த அச்சுறுத்தல்வாதிகளை ஜனநாயக மாண்பற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மோசமான அதிகார துஷ்பிரயோகம்

குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணராஜா கடந்த (04.07.2023) அன்று குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி (07.07.2023) அன்றைய நாடாளுமன்ற உரையிலும், தொடர்ந்து பொதுவிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடுமையான அவதூறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அங்கஜன் இராமநாதன்

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய ஒருவரது நிலைப்பாட்டுக்கு அமைவாக நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது.

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு சட்டமா அதிபர் மட்டத்திலிருந்தும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமையானது மோசமான அதிகார துஷ்பிரயோகமாக அமைகிறது.

அழுகிய முட்டை இறக்குமதி: பாரிய மோசடி குறித்து அசேல சம்பத் விசனம்

அழுகிய முட்டை இறக்குமதி: பாரிய மோசடி குறித்து அசேல சம்பத் விசனம்


உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள்

அத்துடன் நீதிபதிக்கான பொலிஸ் பாதுகாப்பு அண்மையில் குறைக்கப்பட்டிருந்ததோடு, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக தன்னைக் கண்காணித்து வந்திருந்ததாகவும் நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் (Court of Appeal) தனிப்பட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளதாகவும், இவற்றின் அடிப்படையில் தனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் மிகவும் நேசித்த தனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா அறிவித்துள்ளார்.

நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது: அங்கஜன் இராமநாதன் | Angajan Ramanathan Threat To Judiciary

இந்த பதவி துறத்தலானது, பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்ற கடும்போக்குவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த கடும்போக்குவாதத்துக்கு நீதித்துறையும் விலக்கல்ல என்ற துர்ப்பாக்கிய நிலையை கண்டு நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன். தனிநபர்களாலும், அரச கட்டமைப்புகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் சட்டத்தை நம்பி, அதை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையை நாடுகிறார்கள்.

தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

நீதித்துறை ஒன்றே சுயாதீனமாக செயற்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது.

ஆனால் நீதித்துறையையும் வளைத்துப்போடும் வகையில் சிலர் செயற்படும் போது அதை தடுக்காமல் நீதித்துறைக்கு காவலாக இருக்க வேண்டியவர்களே நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் போது, நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் உருவாக்குகிறது.

ஏற்கனவே இந்நாட்டின் சட்டங்கள், வடக்கு - தெற்கு என்ற பேதங்களை பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவமானது அக்குற்றச்சாட்டுகளை இன்னும் வலுச்சேர்த்துள்ளது.

மக்கள் உட்பட அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் முடிவு

மக்கள் உட்பட அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் முடிவு


வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல்கள் தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பணிப்புரைகளையே மீறிச் செயற்படக்கூடிய தரப்புகள் இந்நாட்டை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜனநாயக மாண்புகள் தெரியாத, அவற்றை மதிக்காத அரசியல்வாதிகளாலும், நாட்டில் இன ஒற்றுமையை சிதைத்து அதில் இலாபம் பார்க்க நினைக்கும் தரப்புகளாலும் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகளை தடுத்துநிறுத்தி, சுயாதீனமான சட்ட, நீதித்துறையின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளை இச்சந்தர்ப்பத்திலாவது நாம் ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US