அதி கூடிய வெப்பம்! நாளைய தினம் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் நாளை (20) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், கடும் வெயிலைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மனித உடல் அதிக வெப்பநிலையை உணரும்
இந்த நாட்களில், பல மாவட்டங்களில் வளிமண்டல வெப்பநிலை 32 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது, ஆனால் மனித உடல் அதிக வெப்பநிலையை உணரலாம்.
வெப்பக் குறியீட்டின்படி, உடலால் உணரப்படும் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், மேலும் இது கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகக் கருதப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று அதிக வெப்பத்தை உணர முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.