60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதம் (stroke) போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் விளைவாக, ஆண்டுதோறும் சுமார் 4,000 பேர் உயிரிழக்கவோ, அல்லது முழுமையான உடல் ஊனமுற்ற நிலையிலேயே வாழ வேண்டிய நிலைக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு எச்சரிக்கிறது.
மேலும், நாட்டின் முதியவர்கள் மத்தியில் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 41% வீதமானவர்கள் முறையான சிகிச்சை பெறாமல் இருப்பதாக சுகாதாரத் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% வரை சிக்கலான நோய்கள் அல்லாத, ஆனால் நீடித்த சுகாதாரப் பிரச்சனைகளான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்றவைகளால் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
