கிளிநொச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர்ப் பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றையதினம்(17) இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தனி நபர் ஒருவர் தனது காணியைச் சுத்தம் செய்யும் வேளை சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் குறித்த பகுதியில் நேற்றைய தினம் (17) அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெருந்தொகையான வெடிபொருட்கள்
மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 48 நிமிடங்கள் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam