கிளிநொச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர்ப் பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றையதினம்(17) இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தனி நபர் ஒருவர் தனது காணியைச் சுத்தம் செய்யும் வேளை சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் குறித்த பகுதியில் நேற்றைய தினம் (17) அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெருந்தொகையான வெடிபொருட்கள்
மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan