தமிழர் பகுதியில் மூடப்படும் அபாயத்தில் உணவகம்: பெண்கள் வெளியிட்டுள்ள ஆதங்கம்
நாட்டில் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்மாச்சி உணவகம் வெறிச்சோடி காணப்படுவதாக உணவகத்தில் கடமையாயாற்றும் பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் திருகோணமலை - வாகரை பிரதேசத்தில் உள்ள அம்மாச்சி உணவகமே இவ்வாறு கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த அம்மாச்சி உணவகத்தை பெண்கள் சிலர் தமது சுயதொழில் முயற்சியாக நடத்தி வருகிறார்கள்.
அதிகரித்துள்ள விலைவாசி
இந்நிலையில், கிழக்கு மாகாண சபை அவர்களுக்குரிய வசதிகளை உரிய முறையில் செய்து கொடுக்காதாலும் விலைவாசி அதிகரித்திருப்பதாலும் இந்த உணவகத்தை நடத்தி செல்வது கடினமாக உள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், யுத்தத்தின் பின்னர் பெண்களால் நடத்தப்படும் இந்த உணவகத்தை சீரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உணவகத்தில் கடமையாயாற்றும் பெண்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan