குழந்தைகளை பார்ப்பதற்காக சென்ற அமெரிக்க பேராசிரியர்! முன்னாள் மனைவியின் கொடூர செயல்
அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான பிரெஸ்மிஸ்லாவ் ஜெஜியோர்ஸ்கி(Przemyslaw Jeziorski), தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கிரீஸ் நாட்டிற்கு சென்ற போது தனது முன்னாள் மனைவியால் கொல்லப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக பணிபுரியும் இவர், கிரீஸ் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்துள்ளார்.
இதனையடுத்து, அவர்களின் இரண்டு குழந்தைகளும் தாயின் பராமரிப்பில் கிரீஸ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில், தனது குழந்தைகளை காண கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் உள்ள தனது முன்னாள் மனைவியின் வீட்டுக்கு ஜெஜியோர்ஸ்கி சென்றுள்ளார்.
இதன்போது, அவரை அவரது முன்னாள் மனைவி துப்பாக்கியால் சுட்டதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிரீஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



