பலத்த பாதுகாப்புடன் இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராஜதந்திரிகள்
நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் குழு இன்று (15) பிற்பகல் தமது விமானங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 02.35 மணியளவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-17A விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இந்த குழு வெளியேறுவதற்காக பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாகனங்கள் வரிசையில் வந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு சுமார் 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த விமானங்களை ஏற்றுவதற்கு ரேடியோ கார் மற்றும் கடுமையான பாதுகாப்புக் காவலர்களுடன் லொறி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விமானங்கள் யுத்த உபகரணங்களைக் கொண்டு போக்குவரத்துச் செய்யும் மிகப்பெரிய சரக்கு விமானங்களாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உயர்மட்ட இராஜதந்திரிகள் உள்ளிட்ட 29 பேர் இந்த இரண்டு விமானங்களிலும் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசுபிக் பாதுகாப்பு விடயத்துக்குப் பொறுப்பான தலைமை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
