நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து!
பொகவந்தலாவயில் நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (18) காலை 11:00 மணியளவில் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவுவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து
குறித்த விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு மற்றுமொரு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு நோயாளர்களையும் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நோயாளர் காவு வண்டிக்கு எதிர் திசையில் வந்த லொறி ஒன்றின் முன் சக்கரம், நோயாளர் காவு வண்டியின் பின் சக்கரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் நோயாளர் காவு வண்டியின் பின் சக்கரமும், லொறியில் முன் சக்கரமும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam