பிரதமர் மஹிந்தவின் இளைய புதல்வர் குறித்து வெளிவரும் வதந்திகள்! அவரே தெரிவித்துள்ள விடயம் (Photo)
LPL கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடப் போவதாக வெளிவரும் வதந்திகளுக்கு பிரமதர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச (Rohitha Rajapaksha) மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இடம்பெறவுள்ள LPL கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வானொலி ஒன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியின் கருப்பொருள் பாடலை இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான வீடியோ பதிவு நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.