இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர்! மகிந்தவின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் தானே பிரதமர் என நாட்டின் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம், பிரதமர் பதவி மற்றும் காலிமுகத்திடல் போராட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இவ்வாறான சூழ்நிலைகள் வரும். இவற்றிலிருந்து வெளியில் வர பொறுமையுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான நிலைமைகளில் கடந்த காலங்களிலும் இருந்துள்ளன தானே என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,