யாழ்.பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு உடலில் ஒவ்வாமை!
யாழ்.சங்கானை பிரதேச செயலகத்தில் 15ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜெசிதரன் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் நேற்று (24.11.2022) பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நீர்
இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலர் பொ. பிரேமினி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது,
"உத்தியோகத்தர்களுக்கு தோலில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தண்ணீரினை பரிசோதிப்பதற்காக குறித்த குழுவினர் நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு பெறப்பட்ட தண்ணீர் மாதிரியானது பரிசோதனைக்காக எடுத்து
செல்லப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.