நாடாளுமன்றில் பெண் உறுப்பினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
நாடாளுமன்றில் பெண் உறுப்பினர் வாய்மொழி மூலம் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தலாத அதுகோரளவிற்கு இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்த விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதங்களின் போது இவ்வாறு ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் தலதா அதுகோரளவை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் போது பெண்களின் தனிப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் மொத்தமாக 12 உறுப்பினாகள் இருப்பதாகவும் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் இழிவுபடுத்தல்கள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.