நவ்பர் மௌலவி தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை - சரத் வீரசேகர
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள நவ்பர் மௌலவியிடம் சாட்சியம் பெற ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர் மூன்று முறை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சாட்சியம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே சரத் வீரசேகர இதனை கூறியுள்ளார்.