செல்வம் எம்.பி தொடர்பில் வெளியான மற்றுமொரு குரல்பதிவு! வீடுகளுக்கு தேடிச்சென்று அச்சுறுத்தும் கும்பல்
ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு (Selvam Adaikalanathan) எதிராக ஒரு குரல் பதிவினை அடிப்படையாகக் கொண்டு சமூக மட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஐபிசி தமிழ் ஊடகமும் பல்வேறு காணொளிகளை வெளியிட்டு நேர்காணல்களை நடாத்தி இருந்தன.
இந்தநிலையிலே, நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி இருக்கக் கூடிய அடைக்கலநாதன் ஐபிசி தமிழ் ஊடகம் தமக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், ஐபிசி தமிழ் தமிழர் தாயகத்தில் எப்படி இயங்குகின்றது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் அவர் மீது முன்வைக்கப்பட்ட சந்தேகத்திடற்கிடமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படுத்திய ரெலோ கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுத்தங்களும், மிரட்டல்களும் விடுக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த உறுப்பினர் தனது பாதுகாப்பு கருதி நேற்றையதினம்(13) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்றில் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,