இரண்டு வாரங்களில் சர்வக்கட்சி அரசாங்கம்: ஜனாதிபதி தீர்மானம்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகளுடன் மாத்திரமின்றி போராட்டகாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் நேற்று பதவியேற்ற 18 அமைச்சர்களுக்கு மேலதிக மேலும் 12 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்க உள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் மனோ கணேசன், றிசார்ட் பதியூதீன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அடங்குவதாக கூறப்படுகிறது. அத்துடன் நிதியமைச்சர் பதவியை ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வைத்திருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam