வாகன இறக்குமதி மீது 50 வீத கூடுதல் கட்டணம்.. அலி சப்ரி வெளியிட்டுள்ள பதிவு
வாகன இறக்குமதி மீது 50 வீத கூடுதல் கட்டணம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார்.
உலகளாவிய ஸ்திரத்தன்மை இன்மைக்கு மத்தியில் இலங்கையின் பலவீனமான வெளிநாட்டுத் துறையைப் பாதுகாப்பதற்கான ஒரு விவேகமான நடவடிக்கை என்று அவர் விவரித்துள்ளார்.
"அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்றத்தன்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில், வாகன இறக்குமதி மீது 50 வீத கூடுதல் கட்டணம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் பலவீனமான வெளிநாட்டுத் துறையைப் பாதுகாப்பதையும், பற்றாக்குறையாக உள்ள அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு விவேகமான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்," என்று அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
முன்வைக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்..
2026 மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களுக்கான (Letters of Credit) விலக்கை அவர் வரவேற்று, இது ஒரு நியாயமான பாதுகாப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"இது தேவையற்ற நிச்சயமற்ற தன்மையைத் தவிர்க்கிறது, பின்னோக்கிய சிக்கல்களைத் தடுக்கிறது, மேலும் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள இறக்குமதியாளர்களை மேலும் சிரமங்களிலிருந்தும் தன்னிச்சையான நிர்வாகச் சிக்கல்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
நெருக்கடி காலங்களில், கொள்கையைப் போலவே தெளிவு, நிலைத்தன்மை மற்றும் செயல்படுத்தலில் உள்ள நியாயம் ஆகியவையும் முக்கியமானவை" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
எரிசக்தி சந்தைகள், வர்த்தகப் பாதைகள், விநியோகச் சங்கிலிகள், முதலீட்டாளர் நம்பிக்கை, சுற்றுலா மற்றும் நிதி நிலைமைகளைச் சீர்குலைக்கும் உலகளாவிய மோதல்களால் இலங்கையின் மீட்சி பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது என்று சப்ரி எச்சரித்துள்ளார்.
போர்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் சிறிய பொருளாதாரங்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாகவே பெரும் விலையைக் கொடுக்கின்றன என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை! வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை