மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கை! கலைத்து துரத்திய தீயணைப்பு பிரிவினர் (PHOTOS)
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தீயணைப்பு பிரிவினர் கலைத்து துரத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, உடன் விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கலைத்துள்ளனர்.

சமூக விரோதச்செயல்கள்
இவ்வாறான சமூக விரோதச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை எனவும், தற்போது போதைப்பொருள் பாவனையில் மூழ்கியுள்ள சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இவ்வாறு சமூக அக்கறையின்றி செயற்படும் சில நபர்களால் எமது சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam