இலங்கை ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி
இலத்திரனியல் ஊடகக்துறையில் புரட்சியை உருவாக்கி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சி நேற்று வழங்கியுள்ளது.
தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், பிரதான அறிவிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன ஆகியோரின் பிரதியே பயன்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய செய்தி ஒளிபரப்பு இந்த பிரதிகள் மூலம் நீண்ட நேரம் வழங்கப்பட்டது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க தேசிய தொலைக்காட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித செயல்பாடுகளை எளிதாக்க இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட மற்றும் முன்னணி தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த வருடத்தின் சடங்குகளை பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பியது.
அத்துடன், நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான பார்வையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றது.
அதனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நேற்று செய்தி ஒளிபரப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan