மக்களின் வைப்புக்களில் கை வைப்பதற்கு யாருக்கும் இடமில்லை! அகிலவிராஜ்
பொதுமக்களின் வங்கி வைப்புகளில் கை வைப்பதற்கு எவருக்கும் இடமில்லை என ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை காரியாலயம் அமைந்துள்ள சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வங்கி விடுமுறை
மக்களின் வங்கி வைப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை எனவும் வங்கி விடுமுறை குறித்து தேவையற்ற வாதப்பிரதிவாதங்களை சிலர் உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஸ்வசும போன்ற மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உட்படுத்தி இந்த செயல்திட்டத்தை குழப்பக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் நியாயமான முறையில் இந்த கொடுப்பனவு சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan