கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவாரா அஜித் ரோஹன
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அஜித் ரோஹனவுக்கு பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் கடந்த 18 ஆம் திகதி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் அஜித் ரோஹன பதில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்த பதவி உயர்வை அடுத்து அஜித் ரோஹனவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் காரணமாக அவர், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவார் என கூறப்பட்டது.
எனினும் தான் இன்னும் இந்த கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை என அஜித் ரோஹன கூறியுள்ளார். தொடர்ந்தும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.