இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை: அஜித் நிவார்ட் கப்ரால்!
எரிபொருள் விநியோகத்துக்கான கியூஆர் (QR) குறியீட்டு முறையை இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023க்கு இடையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சியானது கடுமையான பொருளாதாரச் சுருக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
இதனால், தேசிய எரிபொருள் உரிமத்தின் மூலம் வழங்கப்படும் எரிபொருளை ரேஷன் முறையிலும் மக்கள் வாங்க முடியாது.
இந்தநிலையில், இனியும் எரிபொருள் உரிம முறையை நடைமுறைப்படுத்துவது வீண் செயலாகும். டீசல் பயன்பாடு 54 சதவீதம், பெட்ரோல் பயன்பாடு 35 சதவீதம், மண்ணெண்ணெய் பயன்பாடு 75 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Huge reduction in fuel use frm Jan22-Jan23 reflects serious economic contraction: QR rationing now meaningless as people can't afford to buy even the rationed qty: usage down- diesel 54%, petrol 35% & k'sene 75%. #SriLankaEconomy #WorldBank
— Ajith Nivard Cabraal (@an_cabraal) March 15, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
