மஹிந்தவின் வழியை பிற்பற்றும் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வண்டிகள் மற்றும் சைக்கிள்களில் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பல்வேறு பதாதைகளை காட்சிப்படுத்தி தாங்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு பயணிக்கவுள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இந்த உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது எரிபொருள் அதிகரிக்கப்பட்ட போது சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட உறுப்பினர்கள் இவ்வாறு சைக்கிள்களில் நாடாளுமன்றத்திற்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.