இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அஜித் தோவல்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) இன்று (29) வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நாளை (30) நடைபெறவுள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் (CSC) பங்கேற்பதற்காகவே கொழும்பிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இதேவேளை இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டை முடித்துக் கொண்டு நாளை மாலை கொழும்பில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
