வெளிநாடுகளில் இருந்து கனடா செல்வோருக்காக அறிமுகமாகியுள்ள புதிய திட்டம்
வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு செல்லும் பயணிகளுக்காக புதிய திட்டமொன்றை ஏர் கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி குறித்த பயணிகள் ஏர் கனடா விமானங்களில் பயணிக்க முன் தாமாகவே கோவிட் சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்விட்ச் ஹெல்த் என்ற திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் பயணிகள் சுய பரிசோதனை செய்து 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவின் மின்னணு அறிக்கையைப் பெறலாம் என தெரியவருகிறது.
கனடா அரசாங்கத்தின் சோதனை நுழைவுத் தேவைகளை இந்த பரிசோதனையானது பூர்த்தி செய்யும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்தில் பயணிக்கும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் சான்றிதழை (கோவிட் தொற்று இல்லை என்பதற்கான முடிவை) சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri
