கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக வெளியான கடிதம்
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கௌஷல் ரணசிங்க என்ற சட்டத்தரணி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமூகத்தால் பாதிக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் இயேசுவின் அன்பு வியாபிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும்
இந்த சமுகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது சட்ட மற்றும் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாகும். இதுபோன்ற அறிக்கைகள் சமூகத்தில் மேலும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன.
பாலியல் நோக்குநிலை என்பது ஒரு இயற்கையான அம்சம் என்றும், "அறநெறி" என்ற பெயரில் அதை மறுப்பது மருத்துவ அறிவியல் மற்றும் மத உண்மைகளை அவமதிப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்தினாலின் வார்த்தைகள் சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டக்கூடும் என்றும், எவருடைய அடையாளத்தையும் பொருட்படுத்தாமல் அன்புசெலுத்த வேண்டும் எனவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




