கமல் குணரட்னவின் சார்பில் முன்னிலையாகப் போவதில்லை - சட்ட மா அதிபர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோரின் சார்பில் முன்னிலையாகப் போவதில்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பணி இடைநிறுத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதான விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கமல் குணரட்ன மற்றும் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பரிசீலனை
உச்ச நீதிமன்றில் இந்த மனு நேற்றையதினம் (29.11.2024) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களில் கமல் குணரட்ன மற்றும் சீ.டி. விக்ரமரட்னவின் சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாகியிருந்தார்.
இந்த மனு எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தனியார் சட்டத்தரணிகளின் சேவை
எதிர்வரும் காலங்களில் இந்த வழக்கில் பிரதிவாதிகளான கமால் குணரட்ன மற்றும் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோரின் சார்பில் முன்னிலையாகப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

எனவே, பிரதிவாதிகள் தங்களின் சார்பில் தனியார் சட்டத்தரணிகளின் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam