நுவரெலியாவின் ஆலயம் ஒன்றில் 24 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட பூஜை
நுவரெலியா - நானுஓயா, கிளரண்டன் ஆலயத்தில் 24 வருடங்களின் பின்னர் முதன்முறையாக நேற்றையதினம் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றையதினம்(14) புதன்கிழமை முதன்முறையாக விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
24 வருடங்களின் பிறகு நடைபெற்ற பூஜை
24 ஆண்டுகளாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த ஆலயத்தில் தற்போது மீதமுள்ள பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, நேற்றையதினம்(14) ஆலயத்தின் பிரதான நுழைவாயில் கதவு நிலை வைக்கும் நிகழ்வு நடைபெற்று சிறப்பு பூஜைகள் இடம்பெற்றதோடு, தொடர்ந்து கலந்துகொண்ட பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்கு உதவி செய்தவர்கள், ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri