இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்:தென் ஆபிரிக்க ஜனாதிபதி
இலங்கையுடன் இருந்து வரும் நெருங்கிய உறவுகளை மேலும் அதிகரிக்க அர்ப்பணிப்புடன் இருபபதாக தென் ஆபிரிக்க ஜனாதிபதி மத்தமேலா சிறில் ராம்போஃசா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள தென் ஆபிரிக்க ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியமைக்காக சிறில் ராம்போஃசா இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவது தனது அபிலாஷை எனவும் அவர் கூறியுள்ளார்.
தென் ஆபிரிக்கா இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது

இலங்கையுடன் இருந்து வரும் உறவுகளுக்கு தொன்று தொட்டு தென் ஆபிரிக்க சிறப்பிடத்தை வழங்கியுள்ளது.
எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள், நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவது குறித்து சிறப்பு கவனத்தை செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தென் ஆபிரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam