இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்:தென் ஆபிரிக்க ஜனாதிபதி
இலங்கையுடன் இருந்து வரும் நெருங்கிய உறவுகளை மேலும் அதிகரிக்க அர்ப்பணிப்புடன் இருபபதாக தென் ஆபிரிக்க ஜனாதிபதி மத்தமேலா சிறில் ராம்போஃசா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள தென் ஆபிரிக்க ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியமைக்காக சிறில் ராம்போஃசா இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவது தனது அபிலாஷை எனவும் அவர் கூறியுள்ளார்.
தென் ஆபிரிக்கா இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது

இலங்கையுடன் இருந்து வரும் உறவுகளுக்கு தொன்று தொட்டு தென் ஆபிரிக்க சிறப்பிடத்தை வழங்கியுள்ளது.
எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள், நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவது குறித்து சிறப்பு கவனத்தை செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தென் ஆபிரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan