திருகோணமலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆலோசனை
புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்றையதினம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனியின் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று தொழில்புரியும் குடும்பங்களின் எதிர்கால நடவடிக்கைகள், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், பிள்ளைகளின் பராமரிப்பு, அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலான ஆலோசனை வழிகாட்டல் போன்றன பிரதேச செயலாளரினால் தெளிவூட்டப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றல்கள் சேவை
அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணப்பரிமாற்றல்கள் சேவை தொடர்பான விழிப்புணர்வை வெஸ்டர்ன் யூனியனின் பிராந்திய உத்தியோகத்தர் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வின் போது, கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தர்கள், வெளிநாட்டில் பணி புரியும் தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |