ஏழு நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது. நாடளாவிய ரீதியில் உள்ள 2,648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இடம்பெற்றிருந்தது.
இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்கள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை 2 ஆம் திகதி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri