விபுலானந்தா கற்கை நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்கு நிர்வாகம் விதித்த தடை: ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மாணவர்கள் (Photos)
புதிய இணைப்பு
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களையும் விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, பல்கலைகழக மாணவர்களுக்கு நேற்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும், மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களால் வழங்கப்பட்டு பரவலாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்தியானது உண்மைக்குப் புறம்பானதும் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுமாக அமைகின்றது. என நிறுவகம் செய்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மட்டு. சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே போகவிடாமாலும் வெளியில்
இருந்து மாணவர்கள் வளாகத்திற்குள் செல்லவிடாதும் வாசல் கதவை நிர்வாகம் பூட்டியுள்ளதையடுத்து மாணவர்கள் நீதிகோரி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிலையம் இன்று (02) காலை 9 மணியளவில் பூட்டியதுடன் விடுதியில் தண்ணீர் மின்சாரத்தை தடை செய்துள்ளதையடுத்து நீதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த 29ம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து அங்கு விரிவுரையாளரை தடுத்துவைத்து மாணவர்கள் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பாக ஒருவாரத்தில் தீர்வு பெற்றுத்தரப்படும் என பல்கலைகழக நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதையடுத்து போரட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது அதில் உடனடியாக மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் உடனடியாக வெளியேறமுடியாத சூழல் இருக்கின்றது பொருளாதாரப் பிரச்சினை உட்பட வாகனப் பிரச்சினைகள் இருக்கின்றது.
இதனால் மாணவர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக இன்று காலை கூடி சுமூகமான தீர்வை பெற்றுக்கொள்ள தீர்மானித்த நேரத்தில் இந்த வாசல்கதவை பூட்டி இந்த அராஜக செயற்பாடுகளை நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை மிகவும் கண்டிக்கின்றோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவர்கள் தொடர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு பூட்டிய கதவின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
