அதானி முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை - மிலிந்த மொரகொட
அதானி முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை என இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவாலை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
சரிந்த பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதிலும் புத்துயிர் பெறுவதிலும் கவனம் செலுத்தி வரும் இலங்கைக்கு அதானி குழுமத்தின் முதலீடு முக்கியமானது.
மின்சார உற்பத்தியில் பாரிய முதலீடு
அத்துடன் மின்சார உற்பத்தியில் பாரிய முதலீடுகளை இலங்கை நாடுகிறது என்றும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் சர்வதேச அமைப்பில் நுழைய முடியும் என்று நம்புவதாக மொரகொட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
அதானி குழுமம் இலங்கையில் சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள சில மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல்
2020இல் சர்ச்சைக்குரிய மையமாக மாறிய கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதும் இதில் அடங்குகிறது.
இந்த ஆண்டு பெப்ரவரியில் அதானி குழுமம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் பூனேரியில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க ஒப்புதலைப் பெற்றது.
இந்தநிலையில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கான மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விரைவில் கையெழுத்திடுவார்கள் என்று மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கேபிள் இணைப்பு தொடர்பாக இந்தியாவுடன் மிக விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட உள்ளது.
இதேவேளை தமிழர்களின் நல்லிணக்கப் பிரச்சினையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட கால கோரிக்கை குறித்து 'புதிதாக சிந்திக்க வேண்டிய நேரம் இது' என்றும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 11 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
