அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்(Ramanathan Archchuna) வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மொழி ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன்தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
