நிறைவேற்றதிகாரத்தை கொண்டு ஜனநாயகத்தை சீர்குலைக்க ஜனாதிபதி முயற்சி:முஜிபுர் ரஹ்மான்
நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் விமர்சித்துள்ளார்.
கொழும்பு-07 மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வௌியிடும் போதே இவ்வாறு விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதியின் தவறான கருத்துக்கள்
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “உள்ளூராட்சித் தேர்தல் சட்டபூர்வமான முறையில் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து நகைப்புக்கிடமானதாகும்.
ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமையை பயன்படுத்தி அவர் அவ்வாறான தவறான கருத்துக்களை மக்கள் மயப்படுத்த முயற்சி்க்கின்றார். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்.
ஜனாதிபதியின் கருத்தானது நாடு மிகமோசமானதும் அபாயகரமானதுமான நிலையொன்றை எதிர்கொள்ளக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை வௌிக்காட்டி நிற்கின்றது.”என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
