உணவு நெருக்கடிக்கு தீர்வு! பட்டினியால் வாடுவோருக்கு உணவு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுவதாக தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பல்துறை கூட்டுப் பொறிமுறை அமுலாக்க வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்களின் தகவல் சேகரிப்பு
இந்தநிலையில் வீடு வீடாக சென்று உணவு நெருக்கடி குறித்த தகவல்களை சேகரிக்கவும், இது தொடர்பாக தேவையான தரவுகளை தேவைப்பட்டால் இணையத்தின் ஊடாக சேகரிக்கவும் படகொட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உணவு வழங்க திட்டம்
இலங்கையில் எவரையும் பட்டினியால் விட வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதியளவு உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினைக்கு அரச அதிகாரிகளே ஓரளவு பொறுப்பு
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri