நாட்டு மக்களுக்காக பொலிஸார் எடுக்கவுள்ள நடவடிக்கை
கோவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து மேல் மாகாண மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதி வாரத்தில் முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு குழுக்களின் ஊடாக இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தினசரி கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 700 பேரை கடந்துள்ளது.
இதனை கருத்திற் கொண்டு கொழும்பு உட்பட மேல் மாகாண மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கருதி இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam