கடலட்டை பிடித்த ஏழு பேர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Photos)
யாழ்ப்பாணம்-மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரையும், தங்கூசி வலையை பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் நடவடிக்கை
கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்களமும் இணைந்து சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் இனங்காணப்பட்டதுடன், தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்தல்
மேலும் கடற்கரையோரமாக இருந்த தங்கூசி வலையும் கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த எட்டுப்பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்தொழில் நீரியல்வள திணைக்களம்
நடவடிக்கை எடுத்துள்ளது.