அஞ்சல் ரயில்கள் உட்பட 20 ரயில் சேவைகள் ரத்து
கோவிட் தொற்று அதிகரித்ததன் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து இரவு அஞ்சல் ரயில்கள் உட்பட 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பிலிருந்து பதுளை , திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் ஆறு இரவு அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கொழும்பு வெயங்கொட, கொழும்பு-மீரிகம , கொழும்பு-அம்பேபுஸ்ஸ , கொழும்பு-பாணந்துறை , காலி-அளுத்கம இடையே பயணிக்கும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பயணிகள் அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை, மேலும் ஆறு
அலுவலக ரயில்கள் சமூக தூரத்தைப் பராமரிக்கும் வகையில் மேலதிகமாக சேவையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.