சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: இருவர் மாயம்
பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தர பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆட்களை ஏற்றி சென்ற சுற்றுலாப் படகு ஒன்றும் பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகு ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகிலிருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதால் காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
