சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: இருவர் மாயம்
பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தர பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆட்களை ஏற்றி சென்ற சுற்றுலாப் படகு ஒன்றும் பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகு ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகிலிருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதால் காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
