நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானுடம் மோதி விபத்து: இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் படுகாயம்
திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து (09) இன்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆண்டாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிசொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீனக்குடா விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
காயமடைந்தவர்கள் விமானப்படை உத்தியோகத்தர்களான ஆர்.எம். நுவன் சமீர பண்டார (32 வயது) மற்றும் சுரங்க கருணாரத்ன (43 வயது) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மது போதையில் இருந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri