இலங்கையை உலுக்கிய கோர விபத்து - நான்கு உயிர்கள் பலியான காரணம் வெளியானது
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் பூஸ்ஸ வெல்லபட புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கோர விபத்தில் புஸ்ஸ பழைய வீதியை சேர்ந்த காலிங்க ஜினதாஸ எனப்படும் 85 வயதுடைய தந்தையும், காலிங்க சுனிமல் என்ற 46 வயதுடைய மகனும், மகனின் மனைவியான லசிக்கா குமார என்ற 48 வயதுடையவரும், லசிக்காவின் தாயாரான 83 வயதுடைய எமிஸ்ஹாமி என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரும் கிராம சேவகரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த ரயில் வீதிக்கு பாதுகாப்பு கடவை ஒன்று இல்லை எனவும், அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மகனால் முச்சக்கர வண்டி ஓட்டப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கடவை இல்லாமையினால் பாதுகாப்பற்ற ரயில் வீதி ஊடாக பயணித்த போது ரயிலில் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அனைவரும் வீசப்பட்ட நிலையில் கிடந்தனர். பாதுகாப்பு கடவை இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி! - வடமராட்சியில் பெரும் பதற்றம் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri