சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: சிறுவன் பலி
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (27) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்று அதே திசையில் பயணித்த பார ஊர்தி மீது மேதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியை செலுத்திய சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, பார ஊர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
