கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கிய நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேன்பிந்துனுவெவ-கெகிராவ பிரதான வீதியில் யக்கல்ல 22வது சந்தி பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீட்டின் வாயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கலேன்பிந்துனுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கலேன்பிந்துனுவெவ மஹரம்பேவ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஜனக சம்பத் மற்றும் ஹேஷான் இஷார ஆகிய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam