பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியால் ஏற்பட்ட விபரீதம்
நாவலப்பிட்டியில் பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சாரதியான மாணவன் உட்பட ஏனைய மாணவர்களும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள்
கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

பாடசாலையில் நடைபெற்ற விழாவை முடித்துக்கொண்டு நான்கு மாணவர்களும் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பேருந்தில் மோதாமல் தடுக்க முயற்சித்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து விபத்து
இதனால் பின் இருக்கையில் பயணித்த மூன்று மாணவர்களும் பிரதான வீதியில் வீழ்ந்ததாகவும், வீதியில் கிடந்த மூன்று மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை சாரதி வீதியை விட்டு விலகிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் மோதி பேருந்து நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த பாடசாலை மாணவனின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam