வவுனியாவில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து: இருவர் படுகாயம்(Photos)
வவுனியா, ஏ9 வீதியில் மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (09.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏ9 வீதியூடாக வைத்தியசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நீதிமன்றிக்கு அருகே வீதியின் எதிர் திசைக்கு சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுக்குள்ளாகியதுடன் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |