வடமராட்சியில் இடம்பெற்ற கோர விபத்து: 6 பேர் படுகாயம்
வடமராட்சி மந்திகைக்கும் மாலிசந்திக்கும் அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்பாபாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி கொண்டிருந்த உந்துருளியும்( மோட்டார் சைக்கிள்)
மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்த போதே முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கொடிகாம் பருத்தித்துறை வீதியில் இடம் பெற்ற விபத்தில் முதியவர்
ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில்
அனுமதிக்கப்படவடுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
